ஜெர்மனியின் மோயர் நகரில் குருத்வாராவில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 11 பேர் காயமடைந்தனர். இரு தரப்பினரும் கத்தி, பட்டாக்கத்தி, வாள், பெப்பர் ஸ்பிரே ஆகியவற்றை கொண்டு சீக்கியர்கள் மோதிக் கொண்டனர். மோதலின்போது வெட்டுக்காயம் அடைந்த 11 சீக்கியர்கள், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குருத்வாரா நிர்வாக குழுவுக்கு நடந்த தேர்தலில் தோற்றவர்கள், நிர்வாகத்தை கைப்பற்ற வந்தபோது மோதல் ஏற்பட்டது.
