ஓட்டப்பிடாரம், ஏப். 20: ஓட்டப்பிடாரம் தொகுதி தொழில் வளர்ச்சியில் முன்னேறும் வகையில் பல வளர்ச்சி திட்டப்பணிகள் கொண்டு வரப்படும் என்று கிராமங்களில் வாக்கு சேகரித்த அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ் உறுதியளித்தார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ், நேற்று காலை தருவைக்குளம் அருகே ஏ.எம்.பட்டி கிராமத்தில் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அங்கு திரண்டிருந்த பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
