திருவையாறு நகர் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்

திருவையாறு, ஏப்.29: திருவையாறு மின்வாரிய நகர் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட நகர மின்பாதையில், இன்று (29ம் தேதி) காலை 10 மணி முதல் திருவையாறு கீழவீதி, தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதிகளில் திருவையாறு ஐயாறப்பர் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெறுவதால், பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதி தேர்நிலைக்கு வரும்வரை மின்விநியோகம் இருக்காது என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜா தெரிவித்துள்ளார்.

 

Related Stories: