திருச்சி, பிப்.23: திருச்சி மாநகர் மாவட்ட அஇஅதிமுக கழக செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நம் நெஞ்சங்களில் வாழும் இதயதெய்வம் மறைந்த தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா காட்டிய வழியில் தமிழக முதல்வரும், கழக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி, தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க திருச்சி மண்டல பொறுப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம் வழிகாட்டுதலின்படி, மறைந்த மக்கள் தலைவி இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 24.2.2021 (புதன்கிழமை) காலை 10.30 மணி அளவில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.