முசிறி, பிப்.23: திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர் முருகானந்தம், கூலித்தொழிலாளி. இவரது மகன் கவுதம் (19) கல்லூரி மாணவர் கடந்த 17ம் தேதி முசிறியில் உள்ள நர்சரிதோப்பு என்ற இடத்தில் தலையில் ரத்தகாயத்துடன் இறந்து கிடந்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டதில் 16ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற கவுதம் அன்றிரவு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. டிஎஸ்பி பிரம்மானந்தம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் தனிப்படை தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி வந்த நிலையில் முசிறி சுண்ணாம்புகாரை தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன் ராம்கி (எ) ரகுபதி (23), முசிறி அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராஜா மகன் அழகுமணி (38) ஆகிய இருவரும் கவுதம் கொலை வழக்கு தொடர்பாக முசிறி மேற்கு கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தனிடம் சரண் அடைந்தனர்.