ஹைதி நாட்டில் டாடல் லாஃபெரியர் என்ற இடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்துள்ளனர். சிட்டாடல் லாஃபெரியரில் பிரபல சுற்றுலா தலத்தில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறலால் 30 பேர் உயிரிழந்த நிலையில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
