×

ஆசிரியர் பணி நியமன மோசடி மேற்கு வங்க மாஜி அமைச்சர் வீடு, அலுவலகத்தில் ஈடி 5 மணி நேரம் சோதனை

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கடந்த 2014ம் ஆண்டு நடந்த ஆசிரியர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் கல்வி அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி கைது செய்யப்பட்டார். சிபிஐ, அமலாக்கத்துறை தொடர்ந்த இருவழக்குகளிலும் பார்த்தா சட்டர்ஜி ஜாமீன் பெற்றார். இந்தநிலையில், பார்த்தா சட்டர்ஜியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று 5 மணி நேரம் சோதனை நடத்தினர்.

Tags : ED ,West ,Bengal ,Kolkata ,Former ,Education Minister ,Partha Chatterjee ,West Bengal ,CBI ,Enforcement Directorate ,Partha Chatterjee's… ,
× RELATED புதிதாக கொண்டு வரப்பட்ட சட்டத்தில்...