வைக்கோல் டிராக்டரில் தீ

ராசிபுரம், பிப்.21: ராசிபுரம் அருகே மின்கம்பி உரசியதில் வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டரில் தீப்பிடித்தது. ராசிபுரம் அருகே காக்காவேரி பகுதியை சேர்ந்தவர் விவசாயி சகாயராஜ். இவர் பட்டணம் பகுதியில் முருகேசன் என்பவரது தோட்டத்தில் இருந்து டிராக்டரில் வைக்கோல் ஏற்றி கொண்டு காக்காவேரிக்கு திரும்பினார். அப்போது, அங்கிருந்த தாழ்வான மின்கம்பியில் வைக்கோல் போர் உரசியதில் தீப்பிடித்தது. இதையடுத்து, அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் டிராக்டரில் இருந்த பாதி வைக்கோலை கீழே தள்ளிவிட்டு தீயை அணைக்க முயன்றனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த ராசிபுரம் தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் அருகே இருந்த வயல்வெளியும் தீப்பற்றியது. அருகில் குடியிருப்பு பகுதிகள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

Related Stories: