சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் கார்கள்

பள்ளிபாளையம், பிப்.21: பள்ளிபாளையத்தின் பிரதான சாலையான பாலம் ரோட்டில் மாலை நேரங்களில் ஏராளமான கார்கள் நிறுத்தப்படுகிறது. சாலையோரங்களில் இடமிருந்தாலும் பெரும்பாலும் கார்கள் சாலையை ஆக்கிரமித்தே நிறுத்தப்படுகிறது. இதனால் பள்ளிபாளையம் வழியாக ஈரோடு வந்து செல்லும் வாகனங்கள் கடுமையான நெரிசல் சிக்கி காத்திருக்க வேண்டியுள்ளது. இதுதவிர பள்ளிபாளையம் பஸ் நிலைய பகுதிகளில் அனைத்து வாகனங்களும் அதற்கான இடத்தை விடுத்து சாலையை ஆக்கிரமித்தே நிறுத்தப்படுகிறது. சாலையோர கடைகளும், அங்கு வரும் இருசக்கர வாகனங்களும் சாலையிலேயே நிறுத்தப்படுவதால் மாலை நேரங்களில் செயற்கையான நெரிசல் ஏற்படுகிறது. பயணிகள், பொதுமக்களின் நேரத்தை வீணாக்கி வரும் இந்த வாகன நெரிசலை ஏற்படுத்தும் கார்கள், டூவீலர்களை அதற்கான இடங்களில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் நிறுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: