திருச்செங்கோடு, பிப்.21: திருச்செங்கோட்டில் இயங்கி வரும் கே.எஸ்.ஆர் அக்ஷரா அகாடமி மேல்நிலைப்பள்ளி இயக்குநருக்கு விருது வழங்கப்பட்டது. கல்வித் துறையில் 35 வருட அனுபவம் வாய்ந்த கே.எஸ்.ஆர்.பள்ளிகளின் இயக்குனர் அமுதா ஆசைத்தம்பிக்கு சென்னையில் நடைபெற்ற விழாவில் “இன்ஸ்பயரிங் ஸ்கூல் லீடர்” விருது வழங்கப்பட்டது. இந்த விருதை சிபிஎஸ்இ வாரியத்தின் பிராந்திய அதிகாரி ஸ்ரீனிவாசன் வழங்க, பள்ளி இயக்குநர் அமுதா ஆசைத்தம்பி பெற்றுக் கொண்டார். அப்போது, முதல்வர் விஜயலட்சுமி இருந்தார். நாமக்கல் வட்டாரத்தில் சர்வதேச தரத்துடன் தரமான கல்வியை வழங்குவதன் மூலம் அக்ஷரா பள்ளி சமூகத்திற்கு பங்களிப்பு செய்வதை பாராட்டி, இவ்விருது வழங்கப்பட்டது.