சின்னாளபட்டி, பிப்.21: ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் ராமபுரம் பகுதியில் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால், மக்காச்சோளம் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட ராமபுரம், நீலமலைக்கோட்டை, கன்னிவாடி, கட்டசின்னான்பட்டி, காமாட்சிபுரம், எல்லப்பட்டி, டி.புதுப்பட்டி, டி.பண்ணைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் மக்காச்சோளத்தை விவசாயிகள் பயிரிட்டிருந்தனர்.