திருவாரூர் மாவட்டத்தில் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்குகளை திறக்க வேண்டும் சிஐடியூ கோரிக்கை

திருவாரூர், பிப்.19: திருவாரூர் மாவட்டத்தில் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்குகளை உடனடியாக திறந்திட வேண்டும் என சிஐடியூ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சிஐடியூ தொழிற்சங்க மண்டல நிர்வாகிகள் கூட்டம் தலைவர் ஜோதிபாசு தலைமையில் நடந்தது. செயலாளர் மோகன், பொருளாளர் ராஜா, சிஐடியூ மாவட்ட செயலாளர் முருகையன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதில் கடந்த 2012-ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஊழியர்களை நிரந்தரம் செய்திடவேண்டும், கீழஅமராவதி, திருவோணமங்கலம், பள்ளங்கோயில், கொக்காலடி போன்ற இடங்களில் இருந்து வரும் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்குகளை உடனடியாக திறந்திட வேண்டும். அரசு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லை 24 மணி நேரத்திற்குள் அங்கிருந்து இயக்கம் செய்திட வேண்டும். கொள்முதல் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தரமற்ற சாக்குகளை திரும்பப் பெற வேண்டும். காலியாக இருந்து வரும் பட்டியல் எழுத்தர், காவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: