தஞ்சை, பிப்.19: தஞ்சாவூர் ரயிலடி அருகே நேற்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், பெட்ரோல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து மாநகர செயலாளர் குருசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அரவிந்தசாமி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.