ஊட்டி, பிப்.19:ஊட்டி நகரில் இருந்து நகராட்சி அலுவலகம் செல்லும் பாதை அடைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள், தூய்மை பணியாளர்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். ஊட்டி நகராட்சி அலுவலகம் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது. பழமையான கட்டிடத்தில் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்நிலையில், இந்த அலுவலகத்திற்கு செல்வதற்காக இரு வழித்தடங்கள் உள்ளன. ஊட்டி நகரில் இருந்து எளிதாக செல்லும் சிறிய நடைபாதை ஒன்று உள்ளது.
அரசு மேல்நிலைப் பள்ளி வழியாக செல்லும் இந்த நடைபாதை பொதுமக்கள் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு முன் இந்த நடைபாதையை நகராட்சி நிர்வாகம் அடைத்தது.