குன்னூர், பிப்.19: ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நீலகிரி மாவட்டத்தில் மலை ரயில். ஆட்சி அலுவலக கட்டிடங்கள் மற்றும் பெருந்தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. நூற்றாண்டுகளை கடந்தும் கம்பீரமாய் காட்சி அளிக்கிறது பல தேவாலயங்கள்.
இந்நிலையில், நூற்றாண்டு பழமை வாய்ந்த கல்லறைகளில் மிக முக்கியமான கல்லறை குன்னூர் டைகர் ஹில். இந்த கல்லறை 1905ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. தென் இந்தியாவை முதன்முதலில் புகை படமாக ஆவணப்படுத்திய ஏ.டி.டபில்யூ.பென் என்பவரது கல்லறை இங்குதான் உள்ளது. இதுதவிர, கூட்டுறவின் தந்தை என்றழைக்கப்படும் சர் ஜான் நிக்கல்சன்னின் கல்லறையும் இங்குதான் அமைந்துள்ளது. சிறந்த கலைநயம் மிக்க கலைஞர்களை கொண்டு இந்த கல்லறை உருவாக்கப்பட்டது. இந்த கல்லறையின் மத்தியில் மவ்ரிங் ஏன்ஜல் என்றழைக்கப்படும் அழகிய மூன்று வான தேவதைகள் பளிங்கி கற்களால் உருவாக்கப்பட்டது.