பாஜ சிறுபான்மை அணி சார்பில் தூத்துக்குடியில் நாளை நலத்திட்ட உதவிகள் மாநில தலைவர் முருகன் வழங்குகிறார்

தூத்துக்குடி, பிப். 19: தூத்துக்குடியில் பாஜ மாவட்ட  சிறுபான்மை அணி சார்பில் ரூ.5லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாளை (20ம் தேதி) நடக்கிறது. இதில் மாநிலத் தலைவர் முருகன் பங்கேற்று வழங்குகிறார்.

 தூத்துக்குடி மாவட்ட பாஜ  சிறுபான்மை அணி சார்பில் ஏழைகளுக்கு தையல் இயந்திரம், சேலை உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடி அபிராமி மஹாலில் நாளை (20ம் தேதி) மாலை 5 மணிக்கு நடக்கிறது. சிறுபான்மை அணி மாநில தலைவர் ஆசிம் பாஷா தலைமை வகிக்கிறார். மாநில செயற்குழு உறுப்பினர் அசோகன் முன்னிலை வகிக்கிறார். மாநில பொதுச்செயலாளர் கோவை ஜோசப் ஜான்சன் வரவேற்கிறார்.

 இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கும் தமிழக பாஜ தலைவர் எல்.முருகன், 500 பெண்களுக்கு சேலை, 25 பேருக்கு தையல் இயந்திரம் என நலிந்தோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார்.

விழாவில் மாநில துணைத்தலைவர்கள் கருப்பு முருகானந்தம், ராஜா, நயினார் நாகேந்திரன், மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், சிறுபான்மை அணி மாநில துணைத்தலைவர்கள் பிரவின்பால், ஜான்சன், சிறுபான்மை அணி மாநில பொதுச்செயலாளர்கள் கிளாரன்ஸ், கான், சிறுபான்மை அணி மாநில செயலாளர் கல்வாரி தியாகராஜன், தூத்துக்குடி தெற்கு மாவட்டத்  தலைவர் பால்ராஜ், வர்த்தகப் பிரிவு மாநில தலைவர் ராஜகண்ணன், முன்னாள் எம்.பி.  சசிகலாபுஷ்பா வாழ்த்திப் பேசுகின்றனர். சிறுபான்மை அணி மாவட்டத் தலைவர் ஜெயம் செல்வராஜ் நன்றி கூறுகிறார். ஏற்பாடுகளை சிறுபான்மை அணி தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொதுச்செயலாளரான வக்கீல் எஸ்.பி. வாரியர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கிராமப்புற மற்றும் நகர்புற வளர்ச்சி பிரிவு செயலாளர் மணக்கரை முருகன், தூத்துக்குடி மாவட்ட அறிவுஜீவி அணி அமைப்பு செயலாளர் நாட்டாண்மை எம்.கே. மனோகர் தலைமையில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: