தூத்துக்குடியில் பரபரப்பு மேம்பாலத்தில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை முயற்சி

தூத்துக்குடி, பிப். 19:   தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே 3வது ரயில்வே கேட் மேம்பாலம் பகுதிக்கு நேற்று காலை வந்த வாலிபர் ஒருவர், திடீரென மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: