×

பிரிட்ஜ் வந்தால் கணவன்-மனைவி சண்டை வராது: ஜெயக்குமார் ‘தமாஷ்’

சென்னை திருவிக நகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சி ஓட்டேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு பேசுகையில், ‘அதிமுக ஆட்சி அமைந்தால் பிரிட்ஜ் வழங்கப்பட உள்ளதால், இனி வீடுகளில் சண்டையே வராது. நைட் சமைத்த குழம்பை பிரிட்ஜில் வைத்து காலை உணவிற்கு கொடுத்து விடலாம்’ என்றார். அப்போது அரங்கத்தில் இருந்த அதிமுகவினர், ‘‘ஏற்கனவே அனைத்து வீடுகளிலும் அதுதான் நடக்கிறது. இதுகூட முன்னாள் அமைச்சருக்கு தெரியாதா’’ எனக்கூறி அவரை கிண்டல் செய்தனர்.

* சீமான் மற்றும் 3 வேட்பாளர் மீது வழக்குப்பதிவு
கோவை மாவட்டம் காரமடை தெற்கு ரத வீதியில் நாம் தமிழர் கட்சியின் 3 வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின் படி கூட்டத்தை 10 மணிக்குள் முடிக்க வேண்டும். ஆனால் 10 மணியை கடந்தும் சீமான் பேசிக்கொண்டிருந்தார். இதுகுறித்து எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலரும் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி பறக்கும் படை அதிகாரியுமான விஜயா அளித்த புகாரின் பேரில் காரமடை போலீசில் புகார் செய்தனர். இதன்பேரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கோவை வடக்கு தொகுதி வேட்பாளர் நர்மதா, கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளர் கலாமணி, மேட்டுப்பாளையம் தொகுதி வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் மண்டல செயலாளர் அன்சர் அலி என 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Jayakumar 'Thamash ,National Democratic Alliance ,Thiruvik Nagar ,Chennai ,Otteri ,AIADMK ,minister ,Jayakumar ,AIADMK government ,
× RELATED வெளிநாட்டு நிதி பங்களிப்பு...