பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அருகே விளையாட்டு திடல் அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதே பகுதியை சேர்ந்த சிலர் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கினர். ஆர்.கே.பேட்டை அருகே கோபாலபுரம் ஊராட்சியில், அக்கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பலராமன் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். அவரை பணி செய்ய விடாமல் அதே கிராமத்தை சேர்ந்த ஒரு தரப்பினர் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், நேற்று அங்குள்ள புறம்போக்கு நிலத்தில் இளைஞர்களுக்கு விளையாட்டு திடல் அமைக்கும் பணியில் ஊராட்சி மன்ற தலைவர் பலராமன் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், அவரது மகன் சுனில், பார்த்திபன், தெய்வ சிகாமணி உட்பட 5 பேர் விளையாட்டு திடல் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி ஊராட்சி மன்ற தலைவருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளனர்.