சென்னை: அதிமுக சார்பில் சட்டமன்றத் தொகுதிகளுக்கான 154 பொறுப்பாளர்களை நியமித்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட தொகுதிகளுக்கான தலைமைப் பொறுப்பாளராக கே.பி.முனுசாமி நியமனம். சேலம் புறநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களாக செம்மலை, ஆர்.இளங்கோவன் நியமனம். ஈரோடு புறநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட தொகுதிகளுக்கான பொறுப்பாளராக ஏ.கே.செல்வராஜ் நியமனம்
