கட்டிமேடு அரசு பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம்

திருத்துறைப்பூண்டி, பிப்.18: திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் பாலு தலைமை வகித்தார். ஆசிரியர் முகுந்தன் வரவேற்றார். முகாமில் ஆலத்தம்பாடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஆர்த்தி தலைமையில் மருத்துவ பணியாளர்கள் மூலம் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. பின்னர் டாக்டர் ஆர்த்தி மாணவர்களிடம் கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு வழங்கி ேபசினார். இதில் இருபால் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஓவியாசிரியர் நேரு நன்றி கூறினார்.

Related Stories: