கோவை விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று அளித்த பேட்டியில், தவெக விஜய் திடீரென வருகிறார். கடந்த 10 நாட்களாக அவர் களத்தில் இல்லை. இன்று வந்து வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறார். வேட்பாளர்களை கண்டுபிடிக்கவே அவர் சிரமப்பட்டு இருக்கிறார். அவர்கள் களத்திலேயே இல்லை. போட்டி திமுகவுக்கும், அதிமுகவிற்கும் தான். இது மக்களுக்கு தெளிவாக தெரியும் என்றார்.
