விசாரணை கைதி மருத்துவமனையில் உயிரிழப்பு

புழல்: புழல் சிறை விசாரணை கைதி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை ஏழுகிணறு மார்க்கெட் அப்பாசாமி தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் (38). இவர் கடந்த செப். 14ம் தேதி சென்னை கொத்தவால் சாவடி காவல்  எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டார். புழல் விசாரணை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இவருக்கு நேற்றுமுன்தினம் கை, கால்கள் வீக்கம் ஏற்பட்ட நிலையில் சிறைத்துறை சார்பில் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 15ம் தேதி சிகிச்சைக்காக சேர்த் தனர். சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு சந்தோஷ் உயிரிழந்தார். இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: