சிவகாசியில் 19 இடங்களில் ஆவின் பாலகம் திறப்பு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்

சிவகாசி, பிப். 18: சிவகாசி மற்றும் சுற்றுப்பகுதியில் 19 இடங்களில் ஆவின் பாலகங்களை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார். திருத்தங்கல் ஸ்டாண்டர்டு காலனி, அண்ணா காலனி, சரவணா எம்பாசி கல்யாணமண்டபம் உள்பட 19 இடங்களில் ஆவின் பாலகங்களை திறந்து வைத்து விற்பனையையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, சுப்ரமணியன், தெய்வம், திருத்தங்கல் நகர செயலாளர் பொன்சக்திவேல், சிவகாசி நகர செயலாளர் அசன்பதுருதீன், மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் சுபாஷினி, மாவட்ட மீனவர் அணி செயலாளர் ரெங்கபாளையம் காசிராஜன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மதுரை மண்டல இணைச் செயலாளர் கருப்பசாமிபாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர்கள் லட்சுமிநாராயணன், நாகராஜ், இளைஞரணி ஒன்றிய செயலாளர் கே.டி.சங்கர்,  நகர இளைஞரணி செயலாளர் கார்த்திக்,  சிவகாசி ஒன்றிய கவுன்சிலர் ஜெகத்சிங்பிரபு, என்.ஜி.ஓ. காலனி மாரிமுத்து, நாராணபுரம் ஊராட்சி செயலாளர் ஏ.எஸ்.மாரிக்கனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: