மதுரை, பிப்.18: தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் நிலையில், மதுரை மாவட்டத்தில் 13 தாசில்தார்கள் அதிரடியாக நேற்றிரவு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை கலெக்டர் அன்பழகன் வெளியிட்டார். இதில், மதுரை கிழக்கு தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சிவக்குமார் திருமங்கலம் ஆர்டிஓ நேர்முக உதவியாளராகவும். கலால் மேற்பார்வை அலுவலர் சூரியகுமாரி கிழக்கு தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும். திருமங்கலம் தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வராஜ் மதுரை ஆர்டிஓ நேர்முக உதவியாளராகவும், இங்கிருந்து தாசில்தார் கோபி மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளராகவும். தாசில்தார் சரவணன் மதுரை மேற்கு தாலுகா தாசில்தாராகவும். கூடுதல் வரவேற்புரை தாசில்தார் இதய கமலம் விமான நிலைய நில எடுப்பு தாசில்தாராகவும், இங்கு பணியாற்றிய நாகபூஷணம் வடக்கு வட்டம் குடிமை பொருள் தாசில்தாராகவும். அங்கு பணியாற்றிய இளமுருகன் மதுரை தெற்கு கோட்ட கலால் அலுவலகம் தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.