காங்கயம், பிப். 17: காங்கயம் அருகே கோவிலில் இருந்து மர்ம நபர்களால் திருடப்பட்ட சுவாமி சிலை ஐந்து நாட்களுக்கு பின் திரும்ப கோவில் அருகே வைத்து விட்டு சென்றனர். காங்கயம் வட்டம், துண்டுக்காடு கிராமம், குருகிலியம்பாளையத்தில் அழகர் குலத்தவருக்கு சொந்தமான ஸ்ரீ வீரமாத்தி அம்மன் கோவிலில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 11ம் தேதியன்று விநாயகர் சிலை மர்மமான முறையில் காணாமல் போனது. கிராம மக்கள் சிலையை தேடிவந்தனர். காங்கயம் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.