3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் திருச்சி சிறையில் அடைப்பு

தஞ்சை, பிப்.16: இரட்டை கொலை மற்றும் பல்வேறு வழக்குகளில் உள்ள 3 வாலிபர்களை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவிட்டார். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் ராமானுஜபுரம் பெரியார் நகரை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மகன் கவி (எ) கவியரசன் (27). அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் சின்னா (எ) ஹரிஷ் (21), இதேபோல் கும்பகோணம் துளுக்கவெளி, காலனி தெருவைச் சேர்ந்தவர் ரஜினி. இவரது 18 வயது மகன். இவர்கள் 3 பேர் மீது சோழபுரத்தில் கடந்த 24-12-2020ல் நடந்த இரட்டை கொலையில் தொடர்புள்ளது. மேலும் பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து தஞ்சை எஸ்.பி.தேஷ்முக் சேகர் சஞ்சய் பரிந்துரையின்பேரில் திருப்பனந்தாள் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் தாக்கல் செய்த ஆணையுறுதி ஆவணம் மற்றும் இதர ஆவணங்களின்படி 3 இளைஞர்களையும் குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவிட்டார். இதையடுத்து மூவரும் குண்டர் சட்டத்தின்கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: