பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே பாணவேடுதோட்டம் ஊராட்சியில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, அமமுகவை சேர்ந்த சிவசங்கர் ஊராட்சி தலைவராக உள்ளார். இங்கு வசிக்கும் சரவணன்(34) என்பவர் வங்கியில் மேலாளராக வேலை செய்து வருகிறார். இவரது தந்தை லோகநாதன்(63) உடல்நல குறைவால் இரு தினங்களுக்கு முன் இறந்தார். இதையடுத்து அவரது சடலத்தை ஊராட்சிக்கு உட்பட்ட மயானத்தில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடு நடந்தது. மயானத்தில் குழி தோண்டப்பட்டு, நேற்று முன்தினம் மாலை இறுதி ஊர்வலம் நடந்தது. இந்நிலையில், மயானத்தில் லோகநாதன் சடலத்தை புதைக்க ஊராட்சி தலைவர் சிவசங்கர் எதிர்ப்பு தெரிவித்து இறுதி ஊர்வலத்தை தடுத்து நிறுத்தி, “இறந்தவர் வெளியூரை சேர்ந்தவர். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தகவல் வந்துள்ளது.