திருத்தணி: திருத்தணி அருகே குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. திருத்தணி அடுத்த வேலஞ்சேரி அம்பேத்கர் காலனி மற்றும் அம்பேத்கர் நகர் உள்பட பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் பெரும்பாலானவர்கள் விவசாய வேலை உள்பட பல பணிகள் செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், சில நாட்களாக சரிவர குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வந்துள்ளனர். தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஊராட்சி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.