கோவை, பிப். 16: கோவை பம்ப்செட் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர் சங்கம் (கோப்மா) தலைவர் மணிராஜ் கூறியதாவது: கடந்த 10 வருடத்தில் இல்லாத அளவிற்கு மோட்டார் பம்ப்செட் மூலப்பொருட்களின் விலை 20 முதல் 50 சதவீதம் வரை அதிகரித்துவிட்டது. மூலப்பொருட்களை பதுக்கி வைத்து செயற்கை விலையேற்றம் செய்யும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் சார்பில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டதை போல் குறுந்தொழில் முனைவோர்கள் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.