பெரம்பலூர்,பிப்.12: தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறுவோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி பெரம்பலூரில் 10வது நாளாக அரசு ஊழியர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய ஓய்வூதிய திட்டத்தை (சிபிஎஸ்) ரத்து செய்திட வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், எம்ஆர்பி செவிலியர்கள், ஊராட்சி செயலாளர்கள், சமூக வன பாதுகாவலர்கள், மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறையில் ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்ப ட்ட ஊழியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் என கொத்தடிமை கூலிமுறை பெறுவோருக்கு காலமுறை ஊதியம் வழங்கிடவேண்டும். கொரோனாவை காரணம் காட்டி பறிக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்ட உரிமைகளை வழங்கிட வேண்டும்.