கருத்தப்பிள்ளையூரில் கபடி போட்டி

கடையம், பிப். 12: கடையம் அருகே கருத்தப்பிள்ளையூர்  காமராஜர் நண்பர்கள் கழகம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் 5ம் ஆண்டு மின்னொளி கபடி போட்டி நடந்தது. தென்காசி தெற்கு மாவட்ட ெஜ. பேரவை செயலாளர் பிரபாகரன் தலைமை வகித்து போட்டியை துவக்கி வைத்தார். மேலும் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் கடையம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் முருகேசன், பஞ். முன்னாள் தலைவர்கள் குரூஸ் மிக்கேல், ரசூல் முகம்மது, அந்தோணிசாமி, மிக்கேல், சவரிமுத்து, அய்யாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: