திருச்செங்கோடு, பிப்.12: எலச்சிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் முன், பாரபட்சமின்றி விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு விவசாயிகளுக்கான பயிர் காப்பிடு கடன் 31.1.2021 வரை கடன் பெற்றுள்ள பயனாளிகளுக்கு கடன் தள்ளுபடி செய்கிறோம் என அரசு வெளியிட்டது. ஆனால் எலச்சிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில், கடன் கட்ட கால அவகாசம் இருந்தும் முன்கூட்டியே கடனை கட்ட சொல்லியும், வரவு வைத்தும் மீண்டும் பயிர் கடன் தராமல் காலதாமதம் ஏற்படுத்தியதால், எலச்சிபாளையம் விவசாயிகள் 100க்கும் மேற்பட்ட விவாசாயிகள் கடன் தள்ளுபடி திட்டத்தில் இடம்பெறாமல் பாதிக்கபட்டுள்ளனர்.