சாயல்குடி, பிப்.12: சாயல்குடி அண்ணாநகரில் வசிப்பவர் மூதாட்டி சண்முகதாய். இவரது கணவர் இறந்துவிட்டார். இவரின் மகளும் கணவரை இழந்து இரண்டு குழந்தைகளுடன் வறுமையில் வாழ்ந்து வருகிறார். இருவரும் கிடைக்கின்ற கூலி வேலை செய்து வருகின்றனர். கொரோனா காலம் முதல் கடுமையான வறுமையால் வாடி வந்தனர். இந்நிலையில் இவர்களது வீடு சமீபத்தில் பெய்த கனமழையால் இடிந்து சேதமானது. எனவே வாடகைக்கு சிறு வீட்டில் குடியிருந்து வருகின்றனர். இவர்களின் ஏழ்மை நிலையை அறிந்த வெளிநாட்டில் வாழ்கின்ற தமிழக தொழிலாளர்கள், டிரைவர்கள் இணைந்து ஆறு மாதத்திற்கு தேவையான அரிசி, பலசரக்கு சாமான்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினர். செலவிற்கு பணமும் கொடுத்து உதவினர்.