ஊட்டி, பிப். 12: ஊட்டி அருகேயுள்ள ஏமரால்டு பகுதியில் உள்ள மயானத்திற்கு செல்லும் சாலை தரமில்லாமல் அமைக்கப்பட்டதால், சில நாட்களிலேயே பழுதடைந்துள்ளது. ஊட்டி அருகே எமரால்டு பகுதியில் 11க்கும் மேற்பட்ட சிறு சிறு கிராமங்கள் உள்ளன. இவர்கள் அனைவரும் எமரால்டு பகுதியில் உள்ள மயானத்தையே பயன்படுத்தி வருகின்றனர். இந்த 10 கிராமங்களில் இறப்பு ஏதேனும் ஏற்பட்டால், இந்த மயானத்திற்கு வாகனங்கள் மூலமாகவோ அல்லது நடந்தோ கொண்டுசெல்வது வழக்கம். எமரால்டு பகுதியில் இருந்து மயானத்திற்கு செல்லும் சாலை மண் சாலையாக இருந்ததால், மழைக்காலங்களில் இந்த மயானத்திற்கு இறந்தவர்களின் உடல்களை கொண்டுச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து, இப்பகுதி மக்கள் தார் சாலையாக மாற்ற பொதுமக்கள் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.