கொள்ளிடம், பிப்.11: கொள்ளிடம் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள குடோனில் அரசு வீடு கட்டும் பயனாளிகளுக்கு வழங்குவதற்காக இருப்பு வைக்கப்பட்டிருந்த 3 டன் எடையுள்ள ரூ.2 லட்சம் மதிப்பிலான இரும்பு கம்பிகள் நேற்று முன்தினம் திருட்டு போனது. இதுகுறித்து கொள்ளிடம் ஆனைக்காரன் சத்திரம் காவல் நிலைத்தில் பிடிஓ ஜான்சன் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒன்றிய அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடி கேமரா வீடியோ பதிவுகளை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அதில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இரவு காவலராக பணிபுரிந்து வரும் ஒருவர் இரவு 11 மணியளவில் ஒன்றிய ஆணையர் இருக்கும் அலுவலக கதவை திறந்து உள்ளே செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. அவர் உள்ளே சென்றவுடன் சிசிடி கேமரா இயக்கம் நிறுத்தப்படுகிறது.