திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு

தண்டையார்பேட்டை: சென்னை வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞரணி சார்பில் வண்ணாரப்பேட்டை தபால் நிலையம் அருகே ஆர்.கே.நகர், ராயபுரம், பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள திமுக அலுவலகம் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில், வழக்கறிஞரணி மாநில செயலாளர் கிரிராஜன் முன்னிலை வகித்தார். வழக்கறிஞரணி மாவட்ட அமைப்பாளர் மருதுகணேஷ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். இதில் பெரம்பூர் ஆர்.டி.சேகர் எம்எல்ஏ, பகுதி செயலாளர்கள், வழக்கறிஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியில் வழக்கறிஞரணி துணை அமைப்பாளர்கள் தேவபிரசாத்‌, பொம்மு ராஜ், ரூபசங்கர் நன்றி கூறினர்.

Related Stories: