சூதாடிய 5 பேர் மீது வழக்கு

 

கடலுார், மார்ச் 9: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் எஸ்ஐ ஆனந்தகுமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வெள்ளி மோட்டான் தெரு பகுதி அருகே உள்ள தனியார் திருமண மண்டபம் பின்புறம், 5 பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். போலீசாரை கண்டவுடன் தப்பி ஓடி விட்டனர். இது குறித்து திருப்பாதிரிப்புலியூர் லட்சுமணன், சந்தோஷ், எலியஸ், அருண்குமார், காஜா மொய்தீன் ஆகியோர் மீது திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: