வீரவநல்லூர், பிப்.10: கோவிந்தபேரி மனோ கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை சார்பில் தொழில்நெறி வழிகாட்டு சிறப்பு கண்காட்சி, கருத்தரங்கு நடந்தது. சேரன்மகாதேவியை அடுத்த கோவிந்தபேரி மனோ கல்லூரியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இக்கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு பயிற்சித்துறை, மாவட்ட தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் கருத்தரங்கு, கண்காட்சி நடந்தது. கல்லூரி முதல்வர் கேப்டன் மோனி தலைமை வகித்தார். சேரன்மகாதேவி ஏ.எஸ்.பி பிரதீப் கண்காட்சி, கருத்தரங்கினை துவக்கி வைத்து மாணவர்களிடையே சிறப்புரையாற்றி, கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.