கோவில்பட்டி அருகே சிறுமிக்கு கட்டாய திருமணம் வாலிபர் உள்பட 4 பேர் மீது வழக்கு

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே குழந்தைத் திருமணம் தொடர்பாக வாலிபர் உள்பட 4 பேர் மீது அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். கோவில்பட்டி அருகே கடலையூரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் ஜெபக்கனி (23). கட்டிடத் தொழிலாளியான இவருக்கும், 15 வயது சிறுமிக்கும் கடந்த 1-ம் தேதி திருமணம் நடந்தது. இதுதொடர்பாக தூத்துக்குடி சமூக நலத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சமூக நலத் துறை அதிகாரிகள், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பத்மாவதி மற்றும் சைல்டு லைன் அதிகாரிகள் ஆகியோர் கடலையூருக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், குழந்தையின் தந்தைக்கு தெரியாமல், அவரது அனுமதியின்றி திருமணம் நடந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து, சமூக நலத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் பன்னீர்செல்வம் அவரது மனைவி தங்கசெல்வி, மகன் ஜெபக்கனி மற்றும் சிறுமியின் தாய் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Related Stories: