இறகுப் பந்து போட்டி

ராஜபாளையம், பிப்.10: ராஜபாளையத்தில் திருவனந்தபுரம் கோட்டையில் அமைந்துள்ள பி.ஆர் ராமசுப்பிரமணியராஜா உள்விளையாட்டு அரங்கத்தில் மண்டல அளவிலான இளைஞர்களுக்கு இறகுப்பந்து போட்டி 2 நாட்கள் நடந்தன. இதில், மொத்தம் 54 அணிகள் கலந்து கொண்டன. முதல் பரிசை கோயம்பேடு ராம்சிங்கும், இரண்டாம் பரிசு ஆனந்தாஸ் ஆனந்தும் வழங்கினார். மூன்றாம் பரிசை வெல்லக்கடை ராமராஜ் ராஜா வழங்கினார். சிறப்பு விருந்தினராக ஆய்வாளர் பவுல் ஏசுதாஸ் கலந்துகொண்டார். இப்போட்டிகளில் இளைஞர்கள் அனைவரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related Stories: