ஓய்வு பெற்ற ராணுவ வீரர் குத்தி கொலை

விருதுநகர், பிப்.10: விருதுநகர் அருகே ஆமத்தூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் செல்வக்குமார்(42). சிவகங்கை தாசில்தாரின் டிரைவராக பணியாற்றி வந்தார். செல்வக்குமாருக்கும் அதே ஊரை சேர்ந்த பாலகிருஷ்ணனுக்கு பிரச்சனை இருந்துள்ளது. நேற்று மதியம் பாலகிருஷ்ணன் கத்தியால் செல்வக்குமாரை கத்தியால் குத்தி உள்ளார். விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட செல்வக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாலகிருஷ்ணன் ஆமத்தூ போலீஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். ஆமத்தூர் போலீசார் கொலை செய்தற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: