சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் கடந்த 25ம் தேதி நகை பட்டறையில் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழப்பு 4ஆக உயர்ந்துள்ளது. பலத்த தீக்காயம் அடைந்து கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சூரஜ் (23) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிலிண்டர் வெடித்ததில் நகை பட்டறை உரிமையாளர் சுமன் பால் அன்றைய தினமே உயிரிழந்தார். ஸ்ரீமந்தம்மால் (47), ராகேஷ் (26) ஆகியோர் அடுத்தடுத்து மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில் இன்று சூரஜ் உயிரிழந்தனர்.
