இந்தி திணிப்பு – பண்பாட்டு உணர்வுகளை பாதிக்கும்: திருச்சி சிவா கண்டனம்

சென்னை: திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு “கர்தவ்ய த்வார்” என இந்தியில் பெயர் வைத்துள்ள முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தி.மு.க மாநிலங்களவைக் குழு தலைவர் திருச்சி சிவா எம்.பி.கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு இந்தி பேசாத மாநிலம். இப்படியாக பெயரை மாற்றுவது மக்களின் மொழி மற்றும் பண்பாட்டு உணர்வுகளை பாதிக்கும். ஏற்கனவே உள்ள பெயரை மாற்றுவது தேவையற்ற அதிருப்தியை உருவாக்கியுள்ளது என கூறியுள்ளார்.

Related Stories: