அரசு பள்ளி மாணவர்களுக்கு இரும்பு, ஊட்டச்சத்து மாத்திரை வழங்கல்

திருத்துறைப்பூண்டி, பிப்.10: முத்துப்பேட்டை ஒன்றியம், தொண்டியக்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் உத்தரவின்படி 9ம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஊட்டச்சத்து மாத்திரை, இரும்புச்சத்து மாத்திரை தலா பத்து மாத்திரைகள் வீதம் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கும் நிகழ்ச்சி தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது. இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் முத்தண்ணா, பள்ளி ஆசிரியர்கள் கண்ணன், செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories: