எல்லப்பாளையம் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

அன்னூர், பிப்.10: கோவை துடியலூர் அடுத்துள்ள வட்டமலைபாளையம்-  ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடந்த மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில், அரசு மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கள் ஆய்வுகளை காட்சிக்கு வைத்தனர். அதில், அன்னூர் அருகே உள்ள எல்லப்பாளையத்தில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்கள் 6 பேர் சேர்ந்து மின்சாரம் இல்லாமல் இயங்கும் துணி துவைக்கும் கருவியை கண்டுபிடித்தனர். இவர்களுக்கு முதல் பரிசாக ரூ.2500 ரொக்கமும், சான்றும் வழங்கப்பட்டது. இவர்களுக்கு எல்லப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பவளக்கொடி, வழிகாட்டி ஆசிரியர் ஜெகதாம்பாள் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories: