நித்திரவிளை, பிப். 9: நித்திரவிளை அருகே பூத்துறை கூட்டப்புன்னவிளாகம் பகுதியை சேர்ந்தவர் சூசைநாயகம். மீன்பிடித் தொழிலாளி இவருக்கு பனியம்மா என்ற மனைவியும் சுஜின் (22), சுஜித் (19) உள்பட நான்கு பிள்ளைகளும் உண்டு. இதில் சுஜித் இந்திய கால்பந்தாட்ட அணியில் பயிற்சியில் இருந்தவர் ஆகும். நேற்று மாலை 5 மணியளவில் சூசைநாகம் வீட்டில் உள்ள மின் ஒயர் தீ பிடித்து வீட்டில் உள்ள பொருட்களில் பற்றி எரிந்தது. அப்போது வீட்டின் மேல் மாடியில் சுஜின் மட்டும் இருந்துள்ளார். வீட்டினுள் தீ பரவுவதை பார்த்த அவர் மாடியிலிருந்து கீழே குதித்து தப்பினார். சம்பவத்தை பார்த்து ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து தீயை அணைத்துள்ளனர்.