திருச்சி பெரியசூரியூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி கலெக்டரிடம் மனு

திருச்சி, பிப்.9: திருச்சி பெரியசூரியூரில் அந்தோனியார் கோயில் தெரு உள்ளது. இங்குள்ள சாலையில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக கூறி அப்பகுதி மக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும் என கடந்த 2005ம் ஆண்டு முதல் வலியுறுத்தி வந்தனர். அதன்பேரில் அப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இந்நிலையில் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படாமல் பெயருக்கு செய்துவிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர் என குற்றச்சாட்டி, முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி நேற்று அந்தோனியார் கோவில் தெரு பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர். இலவச பட்டா கேட்டு மனு: திருச்சி திருவெறும்பூர் அடுத்த கிருஷ்ண சமுத்திரம் பகுதியில் சுமார் 37 குடும்பங்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்ததின் பேரில் வருவாய்துறையினர் நிலங்களை அளந்தும், பயனாளிகள் விபரங்களை வரிசைப்படுத்தி ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. ஆனாலும் இதுவரை பட்டா வழங்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால் விரைந்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நேற்று கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Related Stories: