சென்னை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், 2,538 பணியிடங்கள் நியமனங்களில் 634 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு அமலாக்கத் துறை தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்பியிருந்தது. இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக எம்.பி. இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, உடனடியாக வழக்குப்பதிவு செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நேற்று தலைமை நீதிபதி அமர்வு முன்பு மனுதாரரான ஐ.எஸ்.இன்பதுரை சார்பில் வழக்கறிஞர் எஸ்.தமிழ் செல்வன் ஆஜராகி, லஞ்ச ஒழிப்புத்துறை இன்னும் வழக்குப் பதிவு செய்யவில்லை என்று முறையிட்டார். இதைக் கேட்ட நீதிபதிகள், இரண்டு, மூன்று நாட்கள் தானே ஆகிறது. நாங்கள் என்ன செய்ய முடியும். இது தொடர்பாக ஏதேனும் மனுதாக்கல் செய்யப்பட்டால் வழக்கமான முறையில் விசாரணைக்கு எடுக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமன விவகாரம் ஐகோர்ட் உத்தரவின்படி வழக்கு பதிவு செய்யப்படவில்லை: உயர் நீதிமன்றத்தில் அதிமுக முறையீடு
- நகராட்சி நிர்வாகத் துறை
- அஇஅதிமுக
- சென்னை
- அமலாக்க இயக்குநரகம்
- தமிழ்நாடு டிஜிபி
- அமைச்சர்
- கே. என் நேரு
- நகராட்சி நிர்வாகம் மற்றும்
- நீர் வழங்கல் திணைக்களம்
