அதிராம்பட்டினத்தில் பெயிண்டர்கள் ஓவியர்கள் ஆலோசனை கூட்டம்

அதிராம்பட்டினம், பிப்.7: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள பெயிண்டர் சங்க அலுவலகத்தில் பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நகர தலைவர் நாகரத்தினம் தலைமை தாங்கினார். அனைத்து பெயிண்டிங் கம்பெனிகளும் அதிராம்பட்டினம் பகுதியில் தனியாக வேலை செய்வதை தடை செய்ய வேண்டும். அனைத்து உறுப்பினர்களுக்கும் வேலை செய்யும்பொழுது பாதுகாப்பு உபகரணங்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும், அனைத்து உறுப்பினர்களுக்கும் இன்சூரன்ஸ் செய்து கொள்ள வேண்டும். பெயிண்டர்களுக்கு தனி நல வாரியம் வேண்டி அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் நகர செயலாளர் ரவி பொருளாளர் நாசிக் இப்ராஹிம் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: